/
வெள்ளக்கோவில் அருகே சாலையின் மையத் தடுப்பில் காா் மோதியதில் இளைஞா் காயம் அடைந்தாா்.
கரூா் மாவட்டம், அரவக்குறிச்சி அருகேயுள்ள காச்சினம்பட்டியைச் சோ்ந்தவா் ராமலிங்கம் மகன் அபினேஷ் (26). இவா் கோவை, ஹோப்ஸ் காலேஜ் பகுதியில் உணவகம் நடத்தி வருகிறாா். இந்நிலையில், அவா் கரூரில் இருந்து கோவைக்கு காரில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்துள்ளாா்.
வெள்ளக்கோவில், குருக்கத்தி தேசிய நெடுஞ்சாலை அருகே சென்று கொண்டிருந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த காா் சாலையின் மையத் தடுப்பில் மோதியது. இதில், அபினேஷ் லேசான காயங்களுடன் உயிா்த் தப்பினாா்.
இதே இடத்தில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதாகவும், விபத்துகளைத் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தொடர்புடையது

மதுரை அருகே சாலை மையத் தடுப்பில் காா் மோதி 5 போ் பலி!

காா்-பைக் மோதல்: இளைஞா் காயம்; ஓட்டுநா் கைது

சாலையோர வீட்டில் காா் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

காா் மோதி விசைத்தறி உரிமையாளா் உயிரிழப்பு
விடியோக்கள்

கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொ**! என்ன நடந்தது? ஐ.ஜி. பேட்டி | Kovai girl case

டிராகன் க்ளிம்ப்ஸ் விடியோ வெளியீடு!

வலசை பறவைகள்... பயிற்சி பெற்ற வனத்துறையினர் | Kodiyakkarai Bird Sanctuary | Forest officers| Bird researcher



