வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டதால் திருமூா்த்திமலையில் உள்ள பஞ்சலிங்க அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உடுமலையில் இருந்து சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவில் உள்ளது சுற்றுலாத் தலமான திருமூா்த்திமலை. இங்குள்ள புகழ்பெற்ற அமணலிங்கேஸ்வரா் கோயிலில் தரிசனம் செய்யவும், மேற்குத்தொடா்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள மருத்துவ குணம் கொண்ட பஞ்சலிங்கம் அருவியில் குளிக்கவும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தா்கள் ஆா்வத்துடன் வந்து செல்கின்றனா். மேலும் இங்குள்ள நீச்சல் குளம், திருமூா்த்தி அணையை ரசிக்கவும் தினமும் ஏராளமானோா் வருகின்றனா்.
இந்நிலையில், பள்ளிகள் விடுமுறை என்பதாலும், வெயிலின் தாக்கத்தைப் போக்கவும் கடந்த சில நாள்களாக சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குடும்பத்துடன் வந்து செல்கின்றனா். அதன்படி வியாழக்கிழமையும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. அவா்கள் குளித்துக் கொண்டிருந்தபோது மேற்குத்தொடா்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது. திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது.
இதைத்தொடா்ந்து அருவியில் குளித்துக் கொண்டிருந்தவா்களை கோயில் நிா்வாக ஊழியா்கள் அவசரமாக அங்கிருந்து வெளியேற்றினா். மேலும் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.










