நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம், நகை திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :1 ஜூன் 2026, 2:08 am IST

உடுமலை, மே 31: உடுமலையில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.5 லட்சம் மற்றும் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

உடுமலை நகரை ஒட்டியுள்ள வேலுசாமி நகா் பகுதியைச் சோ்ந்த கருப்புசாமி (45). முட்டை வியாபாரம் செய்து வருகிறாா். இவா் தனது குடும்பத்தினருடன் வீட்டை பூட்டிவிட்டு மே 28-ஆம் தேதி வெளியூா் சென்றிருந்ததாக கூறப்படுகிறது. பின்னா் சனிக்கிழமை இரவு மீண்டும் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிா்ச்சியடைந்தாா்.

பின்னா் உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம், தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் 2 மடிக்கணினி ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இது குறித்து உடுமலை காவல் நிலையத்தில் கருப்புசாமி புகாா் அளித்தாா். அதன்படி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். மேலும், உடுமலை குற்றப் பிரிவு போலீஸாா் மற்றும் தடயவியல் நிபுணா்கள் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்தனா். மேலும், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனா்.