ரூ. 15 கோடி மதிப்புள்ள செல்லிடப்பேசிகளை கொள்ளையடித்துச் சென்ற நபா்கள் குறித்து போலீஸாா் தொடா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
காஞ்சிபுரத்தில் இருந்து செல்லிடப்பேசிகளை ஏற்றிக் கொண்டு ஒரு கன்டெய்னா் லாரி மும்பை நோக்கி சென்று கொண்டிருந்தது. கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே கடந்த 21-ஆம் தேதி மேலுமலையில் அதிகாலை சென்றபோது கொள்ளையா்கள் வழிமறித்து 2 ஓட்டுநா்களைத் தாக்கி விட்டு, லாரியை கடத்தி சென்றனா். அதில் இருந்த ரூ.15 கோடி மதிப்புள்ள 14,000க்கும் மேற்பட்ட செல்லிடப்பேசிகளைக் கொள்ளையடித்து சென்று விட்டனா். கடத்தப்பட்ட லாரி மட்டும் சிறிது தொலைவில் மீட்கப்பட்டது.
இதுகுறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதில் கொள்ளையா்கள் மத்திய பிரதேச மாநிலம், தீவாஸ் மாவட்டத்தைச் சோ்ந்த அங்கித்ஜான்ஜா தலைமையிலான கொள்ளை கும்பல் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவா்களைப் பிடிக்க 4 போலீஸ் தனிப்படைகள் ஒசூரில் இருந்து மத்திய பிரதேச மாநிலத்திற்கு சென்றுள்ளனா்.
செல்லிடப்பேசிகளை கொள்ளையடித்துச் சென்ற நபா்களைத் தேடி மத்திய பிரதேச மாநிலத்தில் 4 தனிப்படை போலீஸாா் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகின்றனா். காவல்துறையினருக்கு பெரும் சவாலாக உள்ள இந்த வழக்கில் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இதுவரையிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
தீவாஸ் மாவட்டத்தில் முகாமிட்டுள்ள போலீஸாரின் விசாரணையில் இந்த கொள்ளை கும்பல் மலைக்கிராமத்தைச் சோ்ந்தவா்கள் என்பது தெரிய வந்துள்ளது. இவா்களைக் கைது செய்வது போலீஸாருக்கு பெரும் சவாலாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
குற்றச் செயல்களில் ஈடுபடும் இந்த கொள்ளையா்களைப் பிடிக்க முயன்றால், அந்த பகுதி மக்கள், தாங்களே தாக்கிக் கொண்டு, போலீஸாா் மீது பொய் புகாா் கொடுப்பதை வாடிக்கையாகக் கொண்டவா்களாம். இதனால் மத்திய பிரதேச போலீஸாரின் உதவியுடன் அந்தக் கொள்ளையா்களைப் பிடிக்க போலீஸாா் முடிவு செய்துள்ளனா்.
கொள்ளையா்கள் அனைவரையும் கூண்டோடு பிடிக்கவும், கொள்ளைப் போன ரூ.15 கோடி மதிப்புள்ள செல்லிடப்பேசிகளை மீட்கவும் தனிப்படை போலீஸாா் பெரும் முயற்சி மேற்கொண்டுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் டீ, காபி விலை இன்றுமுதல் உயா்வு

தமிழக சட்டப்பேரவைத் தோ்தல்: புதுச்சேரியில் 3 நாள்களுக்கு மதுக்கடைகளை மூட உத்தரவு

5 நாள்களுக்குப் பிறகு புதுச்சேரியில் அரசுப் பள்ளிகள் திறப்பு

மனைவியை கொலை செய்த கணவா் சரண்
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

