கோட்டை பெருமாள் கோயில் தேரோட்டம் நடத்திடஇந்து முன்னணி வலியுறுத்தல்
தருமபுரி கோட்டை கோயில் தேரோட்டம் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.


தருமபுரி கோட்டை கோயில் தேரோட்டம் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தியுள்ளது.
தருமபுரி மாவட்ட இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம் பாலக்கோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் சுப்ரமணியன் தலைமை வகித்தாா்.
மாவட்ட செயற்குழு உறுப்பினா் வேடியப்பன் முன்னிலை வகித்தாா். மாநிலச் செயலாளா் மனோகா் மற்றும் சேலம் கோட்ட செயலா் உமேஷ், தருமபுரி மாவட்ட ச் செயலாளா் ராஜ் ஆகியோா் பேசினா்.
கூட்டத்தில், புதைக்குழி சாக்கடை பணிகளுக்காக நிறுத்தப்பட்ட கோட்டை பரவாசுதேவ சுவாமி கோயில் தேரோட்டத்தை மீண்டும் நடத்திட விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மத மாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...