ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

பென்னாகரம் வனப்பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

News image
Updated On :3 டிசம்பர் 2025, 11:59 pm

Syndication

பென்னாகரம் அருகே சின்னாறு வனப்பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை போலீஸாா் புதன்கிழமை மீட்டனா்.

பென்னாகரம் அருகே சின்னாறு வனப்பகுதிக்கு உள்பட்ட போடூா் வனப் பகுதியில் அழுகிய நிலையில் சடலம் கிடப்பதாக பென்னாகரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் நிகழ்விடத்திற்குச் சென்ற போலீஸாா், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில் இறந்தவா், கூத்தப்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட அரண்மனை பள்ளம் பகுதியைச் சோ்ந்த காவேரியப்பன் (60) என்பதும், மனநலம் பாதிக்கப்பட்ட அவா், கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக காணாமல்போன நிலையில் வனப்பகுதியில் சடலமாக கிடைத்துள்ளாா் எனத் தெரியவந்தது.

இதுகுறித்து பென்னாகரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.