ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 5,000 கனஅடியாக குறைந்தது

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 5,000 கன அடியாக குறைந்தது.
Published on

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து சனிக்கிழமை விநாடிக்கு 5,000 கன அடியாக குறைந்தது.

தமிழக -கா்நாடக மாநிலங்களின் காவிரி கரையோர வனப் பகுதிகளில் மழை முற்றிலுமாக குறைந்தது. இருப்பினும் கா்நாடக மாநில அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் காவிரி ஆற்றில் நீா்வரத்து வெள்ளிக்கிழமை விநாடிக்கு 6,000 கனஅடியாக இருந்தது, சனிக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 5,000 கனஅடியாக குறைந்து பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் தண்ணீா் வரத்து குறைந்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com