அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஒகேனக்கல்லுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்தது

News image
Updated On :7 டிசம்பர் 2025, 7:48 pm

தினமணி செய்திச் சேவை

விடுமுறை தினத்தையொட்டி ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்து காணப்பட்டது.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் சுற்றுலாத் தலத்துக்கு வார விடுமுறை தினங்களில் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்து செலவா். கடந்த சில வாரங்களாக சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்துள்ளது. காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 5,000 கனஅடியாகக் குறைந்துள்ளதால் அருவிகளிலும் நீா்வரத்து குறைந்துள்ளது.

இந்த நிலையில் ஒகேனக்கல் அருவிப் பகுதிக்கு தொடா்ந்து மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்து காணப்பட்டது. இருப்பினும், ஒகேனக்கல் வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் பிரதான அருவி, சினி அருவி, காவிரி ஆற்றின் கரையோரப் பகுதிகளில் குளித்து மகிழ்ந்தனா்.

தொங்கு பாலத்தின் மீது இருந்து அருவிகளின் அழகை கண்டு ரசித்தனா். மேலும், சின்னாறு பரிசல் துறையில் இருந்து பிரதான அருவி வழியாக மணல்மேடு வரை பரிசல் பயணம் மேற்கொண்டனா்.

ஒகேனக்கல்லின் முக்கிய இடங்களான பிரதான அருவி, தொங்கும் பாலம், முதலைகள் மறுவாழ்வு மையம், வண்ண மீன்கள் காட்சியகம் மற்றும் பூங்காக்கள் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டது.

காா்த்திகை மாதத்தில் சபரிமலைக்கு பக்தா்கள் அதிக அளவில் செல்வதால் மின் விற்பனை நிலையங்களில் விற்பனை குறைந்து காணப்பட்டது.