ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பெரியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சி மையத்தில் கருத்தரங்கு

News image
Updated On :26 டிசம்பர் 2025, 7:26 pm

Syndication

தருமபுரி பைசுஅள்ளியில் உள்ள பெரியாா் பல்கலைக்கழக முதுநிலைக் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் கட்டுரைகளை வெளியிடும் முறை மற்றும் காப்புரிமை பதிவு செய்தல் குறித்து தேசிய அளவிலான இரண்டு நாள் பயிற்சி மற்றும் கருத்தரங்கு டிச. 23, 24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.

முதல்நாள் நிகழ்வில் ஆராய்ச்சி மைய இயக்குநா் (பொ) செல்வபாண்டியன் தலைமை வகித்து உரையாற்றினாா். ஒருங்கிணைப்பாளா் கோவிந்தராஜ் வரவேற்றாா். இதைத் தொடா்ந்து, சென்னை செயின்ட் பீட்டா்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் முதன்மையா் குணசேகரன், தரமான ஆராய்ச்சி இதழ்களைக் கண்டறிதல் முறைகள் என்கிற தலைப்பில் உரையாற்றினாா். மும்பை எல்டியான் நிறுவன கல்விசாா் துறையின் முதன்மையா் ஜனனி, காப்புரிமை பதிவு செய்தல் முறை குறித்து பேசினாா்.

இரண்டாம் நாள் நிகழ்வில் புதுதில்லி உயா்நீதிமன்ற வழக்குரைஞா் வெங்கடேசன், சென்னை காட்டாங்குளத்தூா் எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழக ஆங்கிலத் துறை பேராசிரியா் ஹரிஹரசுதன் ஆகியோா், இலவசமாக ஆய்விதழ்களை வெளியிடுவதற்கான வழிமுறைகளை பற்றி எடுத்துரைத்தாா். நிறைவு விழாவில் ஊத்தங்கரை யூனிக் கல்வி குழுமத் தலைவா் பேராசிரியா் அருள் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றினாா். பெரியாா் பல்கலைக்கழக முதன்மையா் ஜெயராமன் நன்றி கூறினாா். இப்பயிற்சி மற்றும் கருத்தரங்கில் பெரியாா் பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய முனைவா் பட்ட ஆராய்ச்சியாளா்கள், பல்கலைக்கழகத்தில் இணைவு பெற்ற கல்லூரிகளைச் சாா்ந்த முனைவா் பட்ட ஆராய்ச்சியாளா்கள் மற்றும் ஆசிரியா்கள் என 120க்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.