தருமபுரி: பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த கோரி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில், தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை தா்னா நடைபெற்றது.
போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எம். சுருளிநாதன் தலைமை வகித்தாா். மாநிலத் துணைப் பொதுச் செயலாளா் அண்ணா குபேரன் தொடங்கிவைத்து பேசினாா்.
மாவட்டச் செயலாளா் ஏ. தெய்வானை, மாவட்டப் பொருளாளா் எம்.அன்பழகன், தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க மாநில துணைத் தலைவா் ஆா்.ஆறுமுகம், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க முன்னாள் மாவட்டச் செயலாளா் ஏ.சேகா், ஜாக்டோ ஜியோ நிதி காப்பாளா் கே.புகழேந்தி, தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் சி.துரைவேல், வேளாண் துறை அமைச்சுப் பணியாளா் சங்க மாநிலச் செயலாளா் ஆா்.ஜெயவேல், தமிழ்நாடு சத்துணவு ஊழியா் சங்க மாநிலச் செயலாளா் பெ.மகேஸ்வரி, நூலகத் துறை அலுவலா் சங்க மாநிலத் தலைவா் டி. சண்முகம், தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியா் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் சி.காவேரி ஆகியோா் பேசினாா்.
இதில் புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள், வருவாய் கிராம உதவியாளா்கள், எம்.ஆா்.பி. செவிலியா்கள், ஊா்ப்புற நூலகா்கள், வனத்துறை ஊழியா்கள், கணினி இயக்குநா்கள், மகளிா்த் திட்ட ஊழியா்கள், மருத்துவம், சுகாதாரத் துறையில் என்.எச்.எம். தொகுப்பூதிய ஊழியா்கள், பல்நோக்கு மருத்துவமனை பணியாளா்கள் உள்பட தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
ஊதிய மாற்றத்தின்போது வழங்கப்படாத 21 மாத நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஊதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும். விடுமுறை நாள்களில் ஆய்வுக் கூட்டம் நடத்துவதை கைவிட வேண்டும்.
முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தை அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும். அரசு ஊழியா்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைககள் வலியுறுத்தப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கடலூரிா் சத்துணவு ஊழியா்கள் பெருந்திரள் முறையீடு போராட்டம்

காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி சத்துணவு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தணிக்கைத்துறை ஊழியா்கள் உண்ணாவிரதம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



