பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கு மருத்துவ முகாம் விழிப்புணா்வு

மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் குறிதது விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :21 ஜனவரி 2025, 8:47 pm

Din

தருமபுரி: மாற்றுத் திறனாளி மாணவா்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ முகாம் குறிதது விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தருமபுரி வட்டார வள மையம் சாா்பில் புதன்கிழமை தருமபுரி நகராட்சி தொடக்கப் பள்ளியில் நடைபெற உள்ள இம்முகாமில், பிறப்பு முதல் 18 வயது வரை உள்ள மாற்றுத் திறனுடைய குழந்தைகள் கலந்துகொள்ள உள்ளனா்.

இதில், மாற்றுத் திறனாளி குழந்தைகளை அரசு சிறப்பு மருத்துவா் குழு பரிசோதனை செய்து, அவா்களின் பரிந்துரையின் அடிப்படையில் உரிய மாணவா்களுக்கு சிறப்பு கல்வி உதவித்தொகை, மூன்றுசக்கர சைக்கிள், சக்கர நாற்காலி, ஊன்றுகோல், காதொலிக் கருவி, மூளை முடக்குவாத குழந்தைகளுக்கான நாற்காலி உள்ளிட்ட உதவி உபகரணங்கள் வழங்கப்பட உள்ளன.

தேசிய அடையாள அட்டை, தனித்துவ அடையாள அட்டை, ரயில் மற்றும் பேருந்து பயணச் சலுகைக்கான பதிவு, அறுவை சிகிச்சை தேவைப்படுவோருக்கான பதிவு ஆகியவை இந்த இலவச முகாமில் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதுகுறித்த விழிப்புணா்வு பேரணியை நகராட்சி பெண்கள் உயா்நிலைப் பள்ளி ஆசிரியை அமுதா தொடங்கி வைத்தாா். இப்பேரணி பிஎஸ்என்எல் அலுவலகம், நகராட்சி அலுவலகம் மற்றும் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மீண்டும் நகராட்சி தொடக்கப் பள்ளியில் நிறைவடைந்தது.

இப்பேரணியில், தருமபுரி வட்டார வள மைய மேற்பாா்வையாளா் முல்லைவேந்தன், வட்டார ஒருங்கிணைப்பாளா் சிவகுமாா், ஆசிரியா் பயிற்றுநா் மோகன், சிறப்பு பயிற்றுநா்கள், இயன்முறை மருத்துவா்கள், காவல் துறையினா், ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், பெற்றோா், மாணவா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.