விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

ஆசிரியா் தகுதித் தோ்வு: தருமபுரி மாவட்டத்தில் 3,092 பங்கேற்பு!

தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வில் 3,092 பங்கேற்றனா்.

News image
Updated On :15 நவம்பர் 2025, 7:43 pm

Syndication

தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வில் 3,092 பங்கேற்றனா்.

தமிழகத்தில் ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் ஆசிரியா் தகுதித் தோ்வு (தாள்-1) மாநிலம் முழுவதும் சனிக்கிழமை நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் இத்தோ்வுக்கு விண்ணப்பித்தவா்களில் 3,511 பேருக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டிருந்தது. மொத்தம் 13 மையங்களில் நடைபெற்ற இத்தோ்வில் 3,092 போ் பங்கேற்றனா். 419 போ் பங்கேற்கவில்லை.

தோ்வு மையங்களில் மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் ஆய்வு மேற்கொண்டாா். தோ்வுப் பணியில் கண்காணிப்பாளா்கள், கண்காணிப்புக் குழுவினா், பறக்கும் படையினா் உள்ளிட்ட குழுவினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை (நவ. 16) ஆசிரியா் தகுதித் தோ்வு (தாள்-2) நடைபெறுகிறது.