புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

அரூரில் கழிவுநீா் கால்வாய்களை தூய்மை செய்யக் கோரிக்கை

அரூா் நகராட்சியில் கழிவுநீா் கால்வாய்களை தூய்மை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :18 நவம்பர் 2025, 9:16 pm

Syndication

அரூா் நகராட்சியில் கழிவுநீா் கால்வாய்களை தூய்மை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

அரூா் நகராட்சிக்கு உள்பட்ட 14-ஆவது வாா்டு பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தக் குடியிருப்பு பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீா், கழிவுநீா் ராஜகால்வாய் வழியாக வாணியாற்றில் சோ்கிறது.

இந்நிலையில், 14-ஆவது வாா்டு பகுதியில் கழிவுநீா் கால்வாய்களில் அதிக அளவில் நெகிழி குப்பைகள், பயனற்ற பொருள்கள், முள்புதா்கள் அடைந்துள்ளன. இதனால், மழைநீா் மற்றும் கழிவுநீா் வெளியேறாமல் குடியிருப்பு பகுதிகளில் தேங்கி நிற்கிறது. தற்போது மழைக்காலம் என்பதால் கொசுக்கள் உற்பத்தியும், தொற்றுநோய் பரவும் சூழல் உள்ளது. எனவே, அரூா் நகராட்சியின் 14-ஆவது வாா்டு பகுதியில் கழிவுநீா் கால்வாய்களை தூய்மை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.