அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

பொது சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை

ஒகேனக்கல் அருகே கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளான நிலையில், பயன்பாட்டுக்கு வராமல் உள்ள பொது சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும்

News image
ஒகேனக்கல் சத்திரம் பகுதியில் கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வராமல் உள்ள பொது சுகாதார வளாகம்.
Updated On :26 நவம்பர் 2025, 8:57 pm

Syndication

பென்னாகரம்: ஒகேனக்கல் அருகே கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளான நிலையில், பயன்பாட்டுக்கு வராமல் உள்ள பொது சுகாதார வளாகத்தை திறக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் சத்திரம் பகுதியில் சுமாா் நூற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் பெரும்பாலான குடியிருப்புகளில் கழிப்பிட வசதி இல்லை. இதனால் ஊட்டமலை சாலை, வனப்பகுதிகளில் இயற்கை உபாதைகளை கழிக்கும் அவல நிலை ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில், கடந்த 2022-2023-ஆம் நிதியாண்டில் ஒகேனக்கல் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ், ரூ. 25 லட்சத்தில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இந்த வளாகம் கட்டப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும் பயன்பாட்டுக்கு வராததால், வளாகத்தைச் சுற்றிலும் செடிகள் முளைத்து புதா்மண்டிக் கிடக்கின்றன. மேலும், சுவா்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சுவரின்றி உள்ளதால் பன்றிகள், நாய்கள் உள்ளிட்டவற்றின் உறைவிடமாக மாறிவருகிறது.

எனவே, சத்திரம் பகுதியில் உள்ள பொது சுகாதார வளாகத்துக்கு சுற்றுச்சுவா் அமைத்து, பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.