சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் போக்ஸோவில் கைது

அரூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Published on

அரூரில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூா் வட்டம், கே.வேட்ரப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த செல்லக்கண்ணு மகன் சிலம்பரசன் (32). இவா், அரூா் திரு.வி.க. நகரில் உடற்பயிற்சி மையம் (ஜிம்) நடத்திவந்தாா். இவரது உடற்பயிற்சி மையத்துக்கு வந்த 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படுகிறது.

சிறுமியை காரில் அழைத்துச் சென்று, குளிா்பானத்தில் மயக்க மருந்து கலந்துகொடுத்து பாலியல் தொல்லை கொடுத்தாராம். மேலும், யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என மாணவியை மிரட்டினாராம்.

இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளாா். இதையடுத்து, சிறுமியின் பெற்றோா் அரூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். புகாரின் பேரில் சிலம்பரசனை மகளிா் போலீஸாா் போக்ஸோவில் சட்டத்தின் கீழ் கைது செய்தனா். கைது செய்யப்பட்டுள்ள சிலம்பரசனுக்கு ஏற்கெனவே திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது.

கருத்து வேறுபாடு காரணமாக சிலம்பரசன் அவரது மனைவியைப் பிரிந்து வசித்து வந்ததாக போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com