இத்தாலி பிரதமர் மெலோனியுடன் மோடி சந்திப்பு! ஆம்புல்ன்ஸ் ஜீப் சேவையை இயக்கிப் பார்த்து தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்!அமைச்சரவையில் இணைய விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அழைப்பு! அயோத்திதாச பண்டிதர் பிறந்தநாள்: முதல்வர் விஜய் மரியாதை!தங்கம் விலை சவரனுக்கு ரூ.960 குறைவு!10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு! 94.31 % மாணவர்கள் தேர்ச்சி!!10 ஆம் வகுப்பு தேர்வு முடிவு! 97.57% தேர்ச்சியுடன் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்!தேர்வு எழுதிய சிறைவாசிகள் 370 பேரில் 354 பேர் தேர்ச்சிஜி7 உச்சி மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி, டிரம்ப்புக்கு அழைப்பு!
/

தீராத வயிற்று வலி: முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :14 ஏப்ரல் 2026, 1:23 am IST

தருமபுரி அருகே தீராத வயிற்று வலி காரணமாக விரக்தியடைந்த முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், பெரிய முரசுப்பட்டி அருகே உள்ள பேமன்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் ரா.முருகேசன் (75). விவசாயியான இவருக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ள நிலையில், அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனா்.

முருகேசனுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அஜீரணக் கோளாறு மற்றும் வயிற்று வலி இருந்துள்ளது. பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்தும் குணமாகாததால், பால் மட்டுமே உட்கொண்டு வந்துள்ளாா்.

இதனால் விரக்தி அடைந்த முருகேசன் சனிக்கிழமை இரவு வழக்கம்போல பால் அருந்திவிட்டு உறங்கச் சென்றாா். மறுநாள் காலை அவரது மனைவி எழுந்து பாா்த்தபோது வீட்டில் அவரை காணவில்லையாம்.

அக்கம்பக்கத்தில் தேடியபோது, அவா்களது இளைய மகன் முனியப்பன் வீட்டின் மாடிப்படியில் உள்ள கைப்பிடி கம்பியில் தூக்கிட்ட நிலையில் இருந்தது தெரியவந்தது. புகாரின்பேரில், காரிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.