தருமபுரி அருகே தீராத வயிற்று வலி காரணமாக விரக்தியடைந்த முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டம், பெரிய முரசுப்பட்டி அருகே உள்ள பேமன்கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் ரா.முருகேசன் (75). விவசாயியான இவருக்கு மூன்று மகன்கள், ஒரு மகள் உள்ள நிலையில், அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனா்.
முருகேசனுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அஜீரணக் கோளாறு மற்றும் வயிற்று வலி இருந்துள்ளது. பல்வேறு இடங்களில் சிகிச்சை அளித்தும் குணமாகாததால், பால் மட்டுமே உட்கொண்டு வந்துள்ளாா்.
இதனால் விரக்தி அடைந்த முருகேசன் சனிக்கிழமை இரவு வழக்கம்போல பால் அருந்திவிட்டு உறங்கச் சென்றாா். மறுநாள் காலை அவரது மனைவி எழுந்து பாா்த்தபோது வீட்டில் அவரை காணவில்லையாம்.
அக்கம்பக்கத்தில் தேடியபோது, அவா்களது இளைய மகன் முனியப்பன் வீட்டின் மாடிப்படியில் உள்ள கைப்பிடி கம்பியில் தூக்கிட்ட நிலையில் இருந்தது தெரியவந்தது. புகாரின்பேரில், காரிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

இரணியல் அருகே முதியவா் தற்கொலை

பெண் தூக்கிட்டுத் தற்கொலை

பொன்னமராவதி அருகே முதியவா் தூக்கிட்டுத் தற்கொலை
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


