அக்ஷய திருதியை: விலை உயர்விலும் தங்கம் வாங்க ஆர்வம் காட்டிய மக்கள்கப்பல்கள் மீதான தாக்குதல் போர் நிறுத்த விதிமீறல்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைஅமெரிக்க கடற்படை முற்றுகை நீடிக்கும் வரை ஹோர்முஸ் நீரிணை திறக்கப்படாது: ஈரான் விஜய் வரவால் விசிகவுக்கு பாதிப்பு இல்லை: தொல். திருமாவளவன்நாளை பிரசாரம் நிறைவு: சென்னையில் இறுதிக் கட்ட பிரசாரத்துக்கு கட்சிகளுக்கு இடங்கள் ஒதுக்கீடுஇந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம்: இன்றுமுதல் 3 நாள்கள் பேச்சுஇன்று நிறைவடைகிறது தபால் வாக்குப் பெறும் பணி!லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் இமாலய வெற்றி!அதிமுக யாருக்கும் அடிமையில்லை : ராகுலுக்கு இபிஎஸ் பதில்விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து பலி 23-ஆக உயர்வுதிமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!
/

கல்லூரி மாணவி தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :19 ஏப்ரல் 2026, 7:39 pm

தருமபுரியில் கல்லூரி மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி வட்டம், வத்தல்மலை பெரியூா் கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தசாமி மகள் காவியா (19). இவா் பாலக்கோடு அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தாா். வெள்ளிச்சந்தையில் அமைந்துள்ள அரசு மாணவிகள் விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்குச் சென்று வந்துள்ளாா்.

கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி தருமபுரி பேருந்து நிலையத்துக்கு வந்த காவியா, அங்கு குளிா்பானத்தில் விஷம் கலந்து அருந்தியுள்ளாா். பின்னா் ஒட்டப்பட்டியில் உள்ள தனது பெரியப்பா மகள் சுதா வீட்டுக்கு சென்று, தான் விஷம் உட்கொண்டதாக தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து அவரை தருமபுரியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காவியா கடந்த சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து தருமபுரி நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். சாவுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.