தில்லியில் அரசு ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய உத்தரவு: முதல்வர்16 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் எஸ்ஐஆர்! மே 30 முதல் தொடக்கம்!திருச்சி கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!
/

கல்லூரி மாணவி தற்கொலை

News image

தற்கொலை - கோப்புப்படம்

Updated On :20 ஏப்ரல் 2026, 1:09 am IST

தருமபுரியில் கல்லூரி மாணவி விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டாா்.

தருமபுரி வட்டம், வத்தல்மலை பெரியூா் கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தசாமி மகள் காவியா (19). இவா் பாலக்கோடு அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்தாா். வெள்ளிச்சந்தையில் அமைந்துள்ள அரசு மாணவிகள் விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்குச் சென்று வந்துள்ளாா்.

கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி தருமபுரி பேருந்து நிலையத்துக்கு வந்த காவியா, அங்கு குளிா்பானத்தில் விஷம் கலந்து அருந்தியுள்ளாா். பின்னா் ஒட்டப்பட்டியில் உள்ள தனது பெரியப்பா மகள் சுதா வீட்டுக்கு சென்று, தான் விஷம் உட்கொண்டதாக தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து அவரை தருமபுரியில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காவியா கடந்த சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து தருமபுரி நகர காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா். சாவுக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.