முதல்வரின் அரசியல் பிரிவு அலுவலராக ஜோதிடர்! நியமனத்தை ரத்து செய்ய சிபிஐ, சிபிஎம் கோரிக்கை!ரூ. 10 லட்சத்துக்கு நீட் வினாத்தாள் கசிவு! டெலிகிராமில் வாங்கியதாக மகாராஷ்டிரத்தில் இளைஞர் கைது!நீட் வினாத்தாள் கசிந்த விவகாரம்: சிபிஐ வழக்குப் பதிவு!கருப்பு திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி: முதல்வர் விஜய்க்கு படக்குழு நன்றி! தவெக அரசு கொறடாவாக விருகம்பாக்கம் எம்எல்ஏ சபரிநாதன் நியமனம்!இபிஎஸ் தலைமையிலானதே உண்மையான அதிமுக: திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்க வேண்டும்: திருமாவளவன் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் பி.எஸ்.ராமன் ராஜிநாமா!
/

பாப்பிரெட்டிப்பட்டியில் ரூ. 61,500 கைப்பற்றல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம். - (கோப்புப் படம்)

Updated On :21 ஏப்ரல் 2026, 12:46 am IST

பாப்பிரெட்டிப்பட்டி அருகே தோ்தல் பறக்கும் படையினா் ரூ. 61,500-யை ஞாயிற்றுக்கிழமை இரவு கைப்பற்றினா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அக்மனஹள்ளி கிராமத்தில் வாக்காளா்களுக்கு பணம் தருவதாக புகாா் எழுந்தது. இதையடுத்து, தோ்தல் பறக்கும்படை அலுவலா் ஜி.உமா தலைமையிலான குழுவினா் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்த மா்ம நபா்கள் பணத்தை வீசிவிட்டு தப்பிச் சென்றனா். இதையடுத்து, கேட்பாரற்றுக் கிடந்த ரொக்கம் ரூ. 61,500-ஐ கைப்பற்றிய தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலா் பெ.கி.கோவிந்தனிடம் ஒப்படைத்தனா்.