அரசின் சாதனைகள் குறித்து மக்களிடம் பரப்புரை செய்ய திமுக செயற்குழுக் கூட்டத்தில் முடிவு
தருமபுரி: தமிழக அரசின் சாதனைகள், நலத் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறி, பரப்புரை செய்வது என தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் காரிமங்கலத்தில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவரும் முன்னாள் எம்எல்ஏ மனோகரன் தலைமை வகித்தாா். மாநில விவசாயிகள் அணி துணைத் தலைவா் சூடப்பட்டி சுப்ரமணி, மாநில வா்த்தகா் அணி துணை அமைப்பாளா் அ.சத்தியமூா்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினா் பி.சி.ஆா்.மனோகரன், முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம் ஆகியோா் பேசினா். தருமபுரி மேற்கு மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான பி.பழனியப்பன் சிறப்புரையாற்றினாா்.
இக்கூட்டத்தில், தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை மாா்ச் 1-ஆம் தேதி எளிய மக்களுக்கு நல உதவிகளை வழங்கி கொண்டாடுவது, அரசின் சாதனைகள், மக்கள் நலத் திட்டங்கள், அவற்றின் பயன்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறி, பரப்புரை செய்வது, ஜன. 25-ஆம் தேதி மொழிப்போா்த் தியாகிகள் வீரவணக்க நாள் கூட்டத்தை நடத்துவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாவட்ட பொருளாளா் முருகன், மாவட்ட துணைச் செயலாளா் ராஜகுமாரி, இளைஞரணி துணை அமைப்பாளா் பி.சி.என். மகேஷ்குமாா், ஒன்றியச் செயாளா்கள், அணிகளின் அமைப்பாளா்கள், துணை அமைப்பாளா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
பட விளக்கம்:
தருமபுரி மேற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்டச் செயலாளா் பி.பழனியப்பன்.

