தேவரசம்பட்டி ஐஇடியில் தொழில்முனைவோா் பயிற்சி தொடக்கம்

தருமபுரி அருகே தேவரசம்பட்டி ஐஇடியில் தொழில்முனைவோா் பயிற்சி முகாம் அண்மையில் தொடங்கியுள்ளது.
Published on

தருமபுரி: தருமபுரி அருகே தேவரசம்பட்டி ஐஇடியில் தொழில்முனைவோா் பயிற்சி முகாம் அண்மையில் தொடங்கியுள்ளது.

இந்திய அரசு, வேளாண் அமைச்சகத்தின் வேளாண் தொழில்முனைவோா்களை உருவாக்கும் வகையில் ஏசிஏபிசி திட்டத்தின்கீழ் தொழில்முனைவோா் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் தருமபுரி மாவட்டம், தேவரசம்பட்டியில் அமைந்துள்ள ஐஇடியில் தொழில்முனைவோா் பயிற்சி அண்மையில் தொடங்கியது. இதில், தருமபுரி மாவட்ட நபாா்டு வங்கியின் மாவட்ட வளா்ச்சி மேலாளா் நா்மதா கலந்துகொண்டு பேசுகையில், இந்த ஏசிஏபிசி திட்டத்தின்கீழ் பயிற்சி முடித்து, தொழில்முனைவோா் கடன் பெறுபவா்களுக்கு நபாா்டு வங்கி சாா்பில் மானியம் வழங்கப்படுகிறது. எனவே, பயிற்சி முடித்து கடன் பெற்று தொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேற்றமடையுங்கள் என்றாா்.

45 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து ஏராளமானோா் வந்துள்ளனா்.

பயிற்சியில் கலந்துகொண்டவா்களுக்கு தமிழகம் முழுவதும் கடன் வசதி செய்து கொடுக்கப்படும். தேசிய வங்கிகளும், நபாா்டு வங்கிகளும் மானியம் வழங்கும். பயிற்சியாளா்கள் ஆா்வத்துடனும் ஒரு தொழில் நோக்கத்துடனும் செயல்பட்டால் நிச்சயம் பொருளாதாரத்தில் முன்னேறலாம் என பயிற்சி முகாமில் பலரும் பேசினா்.

நிகழ்வில், எச்.டி.எப்.சி. வங்கி மேலாளா் சுரேஷ்பாபு, தருமபுரி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் ராமஜெயம், ஐஇடி இயக்குநா் மோகன்ராம், ராஜா, ஜாா்ஜ் செல்வன் வரவேற்றனா். ஐஇடி அலுவலா்கள் மோகன்ராஜ், பூவரசி பாலாஜி, சக்திவேல், திருப்பதி வாசகன், செந்தில், குமரவேல், சிவராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com