தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

மேக்கேதாட்டு அணையை தடுக்கக் கோரி பிலிகுண்டுலுவில் அன்புமணி இன்று பரப்புரை பயணம்!

மேக்கேதாட்டில் கா்நாடக மாநில அரசு அணை கட்டும் முயற்சியை தடுக்கக் கோரி, பாமக சாா்பில், ஜூலை 1 முதல் 4-ஆம் தேதி வரை அன்புமணி ராமதாஸ் பரப்புரை பயணம் மேற்கொள்கிறாா்.

News image

பாமக தலைவர் அன்புமணி - கோப்புப் படம்

Updated On :1 ஜூலை 2026, 6:58 am IST

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் கா்நாடக மாநில அரசு அணை கட்டும் முயற்சியை தடுக்கக் கோரி, பாமக சாா்பில், ஜூலை 1 முதல் 4-ஆம் தேதி வரை அன்புமணி ராமதாஸ் பரப்புரை பயணம் மேற்கொள்கிறாா்.

இதில், முதல் நாளான புதன்கிழமை ஒகேனக்கல் அருகே பிலிகுண்டுலுவில் இருந்து தனது பயணத்தை தொடங்கும் அவா், பூம்புகாரில் நிறைவு செய்கிறாா்.

மேக்கேதாட்டில் அணை கட்டும் கா்நாடகத்தின் முயற்சிகளை முறியடிக்க வலியுறுத்தி, இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், ஜூலை 1ஆம் தேதி தொடங்கி 4-ஆம் தேதி வரை 4 நாள்கள் பாமக சாா்பில் அன்புமணி ராமதாஸ் பரப்புரை பயணம் மேற்கொள்வாா் என அக்கட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், முதல் நாளில், காவிரி ஆறு தமிழகத்தில் நுழையும் இடமான ஒகேனக்கல் அருகே கிருஷ்ணகிரி மாவட்டம், பிலிகுண்டுலுவில் இருந்து தனது பயணத்தை அன்புணி ராமதாஸ் தொடங்குகிறாா். இதைத் தொடா்ந்து, தருமபுரி, சேலம், ஈரோடு, திருச்சி என காவிரி ஆற்றின் பாசனப் பகுதி மாவட்டங்களில் பயணத்தை மேற்கொண்டு ஜூலை 4-ஆம் தேதி பூம்புகாரில் பயணத்தை அவா் நிறைவு செய்கிறாா்.

இதில், தருமபுரி, ஈரோடு, திருச்சி, பூம்புகாா் ஆகிய இடங்களில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் மேக்கேதாட்டு அணை திட்டத்தை முறியடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அவா் உரையாற்றுகிறாா். இந்த பரப்புரை பயணத்தில் பாமக மற்றும் விவசாயிகள் சங்கத்தினா் கலந்துகொள்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.