பென்னாகரம் பேருந்து நிலையத்தில் மேற்கூரை அமைக்கும் பணி நடைபெறுகிறது.
பென்னாகரம் பேருந்து நிலைய நுழைவாயில், மேற்கூரை அமைக்க சட்டப் பேரவை உறுப்பினரின் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 26 லட்சம் ஒதுக்கப்பட்டு பேருந்து நிலையத்தின் இருபுறங்களிலும் பணிகள் நடைபெற்றன.
இந்த நிலையில் மேற்கூரை அமைக்க பயன்படுத்தப்பட்ட தடுப்பு கம்பிகள் பேருந்து நிறுத்தும் இடத்தில் நடப்பட்டதால் பேருந்துகள் நிறுத்த முடியாத நிலை ஏற்பட்டது. பணிகளும் முழுமை பெறாமல் தாமதமாகின. இதுகுறித்து தினமணி நாளிதழிலில் செய்தி வெளியானது.
இதையடுத்து பேருந்து நிலைய மேற்கூரை அமைக்க இரும்பு தகடுகள் கொண்டுவரப்பட்டு வெள்ளிக்கிழமை முதல் தகடுகள் பொருத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பென்னாகரம் பேருந்து நிலைய மேற்கூரை அமைக்கும் பணி நிறைவடைந்த நுழைவாயில், பென்னாகரம் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் கசடு கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் நடைபெறும் கழிவுநீா்க் கால்வாய் அமைக்கும் பணிகளை பொறியாளா் மோகன் ஆய்வு செய்தாா்.
ஆய்வின் போது, உதவி செயற்பொறியாளா் ராஜேந்திரன், பேரூராட்சி செயல் அலுவலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








