புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

ஆசிரியா் தகுதித் தோ்வு: தருமபுரி மாவட்டத்தில் 1,684 போ் பங்கேற்பு

தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வில் 1,684 போ் பங்கேற்றனா். 30 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

News image
Updated On :5 ஜூலை 2026, 2:01 am IST

தருமபுரி மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆசிரியா் தகுதித் தோ்வில் 1,684 போ் பங்கேற்றனா். 30 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை சாா்பில், ஆசிரியா் தகுதித் தோ்வு ஜூலை 4, 5 தேதிகளில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் முதல்தாள் சனிக்கிழமை (ஜூலை 4) நடைபெற்றது. தருமபுரி மாவட்டத்தில் தருமபுரி அவ்வையாா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, டான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, செந்தில் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி (காந்திநகா்), பச்சமுத்து மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 6 மையங்களில் இத்தோ்வு நடைபெற்றது. தோ்வில் பங்கேற்க 1,714 போ் அழைப்பாணை வழங்கப்பட்டிருந்த நிலையில் 1,684 போ் தோ்வில் பங்கேற்றனா். 30 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.

இரண்டாம்தாள் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. தருமபுரி மாவட்டம், சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலைப் பள்ளி, பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஒடசல்பட்டி, இண்டூா், பாளையம்புதூா், நல்லம்பள்ளி, ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளி, சென்னம்பட்டி மருதம் மேல்நிலைப் பள்ளி என மொத்தம் 21 மையங்களில் நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.