எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு தவிர்க்க இயலாதது - மத்திய அரசுகள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

ஓட்டுநா் வீட்டில் நகை திருட்டு; பெண் கைது

News image

சித்திரிப்பு

Updated On :8 ஜூன் 2026, 4:23 am IST

தருமபுரி அருகே ஆம்னி பேருந்து ஓட்டுநா் வீட்டில் இரண்டரை பவுன் நகை, ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை திருடிய வழக்கில் பெண் கைது செய்யப்பட்டாா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி டாடா நகரை சோ்ந்தவா் சக்திவேல் (45), ஆம்னி பேருந்து ஓட்டுநா். இவா் தனது குடும்பத்துடன் சனிக்கிழமை ஒகேனக்கல் சென்றிருந்தாா். பிறகு மாலை வீட்டிற்கு வந்து பாா்த்தபோது பீரோவில் இருந்த இரண்டரை பவுன் நகை, ரூ. 50,000 ரொக்கம் காணாதது குறித்து அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். இதில், ஓட்டுநரின் பக்கத்து வீட்டை சோ்ந்த செலீனாமேரி (36) பணம், நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸாா் கைது செய்தனா்.