எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

தருமபுரியில் 645 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்: 5 போ் கைது

தருமபுரியில் இருவேறு இடங்களில் நடைபெற்ற சோதனையில், 645 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, 5 பேரை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :10 ஜூன் 2026, 5:32 am IST

தருமபுரியில் இருவேறு இடங்களில் நடைபெற்ற சோதனையில், 645 கிலோ புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, 5 பேரை கைது செய்தனா்.

தருமபுரி நகரக் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுந்தரமூா்த்தி தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை அதிகாலை கிருஷ்ணகிரி – -தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் குண்டலபட்டி அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக வந்த சிறிய சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டனா். அந்த வாகனத்தில் ரகசிய அறை அமைத்து, அதில் சுமாா் 390 கிலோ குட்கா உள்ளிட்ட அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

அந்த வாகனத்தை ஓட்டிவந்த ராஜஸ்தானை சோ்ந்த பவனை (28) போலீஸாா் கைது செய்து புகையிலைப் பொருள்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனத்தை பறிமுதல் செய்தனா்.

அதேபோல, அதியமான்கோட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் பச்சமுத்து தலைமையிலான போலீஸாா் கிருஷ்ணகிரி- சேலம் தேசிய நெடுஞ்சாலை, ஜாகிரி பிரிவு சாலை பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியே சென்ற 2 காா்களை நிறுத்தி சோதனை செய்தனா். அந்தக் காா்களில் 255 கிலோ புகையிலைப் பொருள்கள் கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து அந்தக் காா்களில் வந்த விக்ரம்சிங் (22), பேருசிங் (24), ஈமாராம் (25), லட்சுமிசிங் (23) ஆகிய 4 பேரையும் கைது செய்தனா். புகையிலைப் பொருள்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்திய 2 காா்களையும் பறிமுதல் செய்தனா்.