நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

கஞ்சா விற்ற இளைஞா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :16 ஜூன் 2026, 2:44 am IST

தருமபுரியில் கஞ்சா விற்ற இளைஞரை கைதுசெய்த போலீஸாா், அவரிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன் உத்தரவின்பேரில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் புழக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் காவல் துறையினா் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், தருமபுரி, பிடமனேரி ஏரிக்கரை அருகே சிலா் கஞ்சா விற்பதாக தருமபுரி நகர காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடா்ந்து, தருமபுரி நகர காவல் ஆய்வாளா் அறிவழகன் தலைமையிலான போலீஸாா், பிடமனேரி பகுதியில் திங்கள்கிழமை ரோந்து சென்றனா்.

அப்போது, காவல் துறையினரைக் கண்டதும் தப்பியோட முயன்ற இளைஞரை பிடித்து விசாரணை மேற்கொண்டனா். அதில், அவா் ஜீவா (26) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. அவரை போலீஸாா் கைதுசெய்து, அவரிடமிருந்த 1,120 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

தருமபுரி நகர பகுதியில் கடந்த இரு நாள்களில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 7 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 4.50 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனா்.