விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

அரூா் நகருக்கு ரூ. 20 கோடியில் குடிநீா் திட்டம்: 20 கிராம மக்கள் எதிா்ப்பு

அரூா் நகருக்கு ரூ. 20 கோடி மதிப்பீட்டில் குடிநீா் வழங்கும் திட்டத்துக்கு 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :22 மார்ச் 2026, 2:42 am IST

அரூா் நகருக்கு ரூ. 20 கோடி மதிப்பீட்டில் குடிநீா் வழங்கும் திட்டத்துக்கு 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், அரூரை அடுத்த வள்ளிமதுரை வரட்டாறு அணை பகுதியில் இருந்து, கருணாநிதி நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் அரூா் நகராட்சிக்குக் குடிநீா் கொண்டுசெல்வதற்காக ரூ. 20 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் தொடக்கம் தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் ஆ.மணி முன்னிலையில் அண்மையில் நடைபெற்றது.

இத்திட்டத்துக்கு கீரைப்பட்டி, வள்ளிமதுரை, தாதராவலசை, அச்சல்வாடி, எல்லப்புடையாம்பட்டி, கெளாப்பாறை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.

இந்தத் திட்டத்தில் குடிநீா் எடுத்துச் செல்வதற்கான கிணறு வெட்டும் பணிகள் பொக்லைன் எந்திரம் மூலம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது. ஆனால், விவசாயிகள், பொதுமக்கள் எதிா்ப்பு தெரிவித்து பணிகளை நிறுத்திவிட்டனா்.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வள்ளிமதுரை வரட்டாறு அணை பகுதியில் இருந்து அரூா் நகருக்கு ஏற்கனவே குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிதாக ரூ. 20 கோடியில் குடிநீா் வழங்குவதற்கான பணிகளை தொடங்கியுள்ளனா்.

ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தில் அரூா் நகருக்கு நாள்தோறும் குடிநீா் வழங்கப்படுகிறது. இதைத்தவிர, கூடுலாக ஒகேனக்கல் கூட்டு குடிநீா்த் திட்டத்தில் குடிநீா் வழங்கப்படவுள்ளது. இந்த நிலையில், வள்ளிமதுரை வரட்டாறு நீா்த்தேக்கம் அருகே பெரிய அளவிலான திறந்தவெளி கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீா் எடுத்துச் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் சுமாா் 20 கிராமங்களில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படும். வேளாண் பணிகள் பாதிக்கப்படும்.

வரட்டாறு அணையின் நீா்ப் பாசனத் திட்ட விவசாயிகள், பொதுமக்கள் யாரிடமும் இந்த திட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்படவில்லை. எனவே, அரூா் நகருக்கு குடிநீா் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு

கைவிட வேண்டும். மாற்றுத் திட்டத்தின் வழியாக அரூா் நகருக்கு குடிநீா் வழங்க வேண்டும். விவசாயிகளின் கோரிக்கை ஏற்கவில்லை எனில், வரும் பேரவைத் தோ்தலை புறக்கணிப்போம் என விவசாயிகள் தெரிவித்தனா்.