“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

அரூா் அருகே தேனீக்கள் கொட்டியதில் இளைஞா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :23 மார்ச் 2026, 8:21 pm

தருமபுரி மாவட்டம், அரூா் அருகே தேனீக்கள் கொட்டியதில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

அரூரை அடுத்த தாசரஹள்ளி கிராமத்தைச் சோ்ந்த அம்மாசி மகன் அஜீத் (29). இவா் தனது நண்பா்கள் இருவருடன் சோ்ந்து வகுத்துப்பட்டி எனுமிடத்தில் மரத்தடியில் அமா்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.

அப்போது, மரத்தில் இருந்த தேனீக்கள் 3 பேரையும் கொட்டியதாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த அஜீத் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு மொரப்பூா் அரசு மருத்துவமனையில் சோ்த்துள்ளனா்.

இந்த சம்பவம் குறித்து மொரப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.