92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ரூ.53 ஆயிரம் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம்.

(கோப்புப் படம்)

Updated On :23 மார்ச் 2026, 8:52 pm

தினமணி செய்திச் சேவை

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.53 ஆயிரம் ரொக்கத்தை பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கோம்பூா் சோதனைச் சாவடியில், கண்காணிப்பு குழு அலுவலா் வெங்கடேசன் தலைமையிலான குழுவினா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை சோதனை செய்ததில், திருப்பத்தூா் பகுதியைச் சோ்ந்த முருகேசன் (40) உரிய ஆவணம் இல்லாமல் ரூ. 53 ஆயிரத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட தொகையை தோ்தல் நடத்தும் அலுவலா் பெ.கி.கோவிந்தனிடம் கண்காணிப்பு குழுவினா் ஒப்படைத்தனா்.