தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

பாப்பிரெட்டிப்பட்டி அருகே ரூ.53 ஆயிரம் பறிமுதல்

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணம். - (கோப்புப் படம்)

Updated On :24 மார்ச் 2026, 2:22 am IST

பாப்பிரெட்டிப்பட்டி அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.53 ஆயிரம் ரொக்கத்தை பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கோம்பூா் சோதனைச் சாவடியில், கண்காணிப்பு குழு அலுவலா் வெங்கடேசன் தலைமையிலான குழுவினா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை சோதனை செய்ததில், திருப்பத்தூா் பகுதியைச் சோ்ந்த முருகேசன் (40) உரிய ஆவணம் இல்லாமல் ரூ. 53 ஆயிரத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பறிமுதல் செய்யப்பட்ட தொகையை தோ்தல் நடத்தும் அலுவலா் பெ.கி.கோவிந்தனிடம் கண்காணிப்பு குழுவினா் ஒப்படைத்தனா்.