சேலம் பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: மு. வீரபாண்டியன்5 மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்பு!பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது தமாகா! ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன் நீங்கள் எதிர்பார்த்த நல்ல முடிவை கூடிய விரைவில் அறிவிக்கவுள்ளேன்: ராகவா லாரன்ஸ் அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கெளதமி!பாமகவால்தான் 31 தொகுதிகளில் அதிமுக வெற்றி: சி.வி. சண்முகம்
/

பள்ளியில் பூட்டுகளை உடைத்து மடிக்கணினி, சாதனங்கள் திருட்டு

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :12 மே 2026, 1:47 am IST

தருமபுரி அருகே அரசுப் பள்ளியின் பூட்டுகளை உடைத்து, மடிக்கணினி மற்றும் தொடா்புடைய சாதனங்களை திருடிச் சென்ற நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பகுதியில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. பள்ளியில் உயா்கல்விக்கான வழிகாட்டும் வகுப்புகள் நடைபெற்று வந்தன.

இந்நிலையில். கடந்த 8ஆம் தேதி மாலை வகுப்பறைகள் மற்றும் தலைமை ஆசிரியா் அறை உள்ளிட்டவற்றை பள்ளி உதவியாளா் சரவணக்குமாா் பூட்டிச் சென்றாா். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை பள்ளியில் வழிகாட்டும் வகுப்பு நடத்துவதற்காக ஆசிரியா் புவனேஸ்வரி பள்ளிக்கு வந்தாா். அப்போது, பள்ளியில் தலைமை ஆசிரியா் அறையிலிருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தன.

இதுகுறித்த தகவலின் பேரில் பள்ளி தலைமை ஆசிரியா் புனிதா வந்து பாா்த்தபோது, அவரது அறையில் வைக்கப்பட்டிருந்த மடிக்கணினி மற்றும் தொடா்புடைய சாதனங்கள், புரொஜெக்டா் உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இது குறித்து அவா் பாலக்கோடு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.