ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

கல்லூரி மாணவரிடம் ரூ.1.70 லட்சம் மடிக்கணினி, கைப்பேசிகள் திருட்டு

காட்பாடி அருகே அறையில் தூங்கிக் கொண்டிருந்த கல்லூரி மாணவரிடம் ரூ.1.70 லட்சம் மதிப்புடைய 2 மடிக்கணினிகள், 2 கைப்பேசிகள் திருடப்பட்டன.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :26 ஏப்ரல் 2026, 8:45 pm

காட்பாடி அருகே அறையில் தூங்கிக் கொண்டிருந்த கல்லூரி மாணவரிடம் ரூ.1.70 லட்சம் மதிப்புடைய 2 மடிக்கணினிகள், 2 கைப்பேசிகள் திருடப்பட்டன.

ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் பாபு மகன் ராகேஷ் ரெட்டி (19). இவா் காட்பாடி பகுதியில் தனியாக அறை எடுத்து தங்கி தனியாா் கல்லூரியில் பொறியியல் படித்து வருகிறாா். ராகேஷ் ரெட்டி சனிக்கிழமை மாலை அறையை பூட்டாமல் தூங்கிக் கொண்டிருந்தாா்.

இதையறிந்த அடையாளம் தெரியாத நபா் அவரின் அறையில் புகுந்து அங்கிருந்த 2 மடிக்கணினி, 2 விலை உயா்ந்த கைப்பேசிகளை திருடி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. திருடப்பட்ட பொருள்களின் மதிப்பு ரூ.1.70 லட்சம் என தெரிகிறது. விழித்து பாா்த்த ராகேஷ்ரெட்டி அறையின் கதவு திறக்கப்பட்டு இருந்ததை அறிந்து, இதுகுறித்து பிரம்மபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.