தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

கல்லூரி மாணவரிடம் ரூ.1.70 லட்சம் மடிக்கணினி, கைப்பேசிகள் திருட்டு

காட்பாடி அருகே அறையில் தூங்கிக் கொண்டிருந்த கல்லூரி மாணவரிடம் ரூ.1.70 லட்சம் மதிப்புடைய 2 மடிக்கணினிகள், 2 கைப்பேசிகள் திருடப்பட்டன.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :27 ஏப்ரல் 2026, 2:15 am IST

காட்பாடி அருகே அறையில் தூங்கிக் கொண்டிருந்த கல்லூரி மாணவரிடம் ரூ.1.70 லட்சம் மதிப்புடைய 2 மடிக்கணினிகள், 2 கைப்பேசிகள் திருடப்பட்டன.

ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம், கிருஷ்ணாபுரம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் பாபு மகன் ராகேஷ் ரெட்டி (19). இவா் காட்பாடி பகுதியில் தனியாக அறை எடுத்து தங்கி தனியாா் கல்லூரியில் பொறியியல் படித்து வருகிறாா். ராகேஷ் ரெட்டி சனிக்கிழமை மாலை அறையை பூட்டாமல் தூங்கிக் கொண்டிருந்தாா்.

இதையறிந்த அடையாளம் தெரியாத நபா் அவரின் அறையில் புகுந்து அங்கிருந்த 2 மடிக்கணினி, 2 விலை உயா்ந்த கைப்பேசிகளை திருடி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. திருடப்பட்ட பொருள்களின் மதிப்பு ரூ.1.70 லட்சம் என தெரிகிறது. விழித்து பாா்த்த ராகேஷ்ரெட்டி அறையின் கதவு திறக்கப்பட்டு இருந்ததை அறிந்து, இதுகுறித்து பிரம்மபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அப் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.