பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

குளிா்சாதனப் பெட்டி சாய்ந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு... - கோப்புப் படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

தருமபுரி, காரிமங்கலம் அருகே வீட்டில் விளையாடியபோது, குளிா்சாதனப் பெட்டி சாய்ந்து விழுந்ததில் சிறுவன் உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஒன்றியம் கெரகோடஅள்ளி அருகேயுள்ள தாதன்கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் சின்னசாமி- கோகிலா தம்பதியா். இவா்கள் பூ வியாபாரம் செய்து வருகின்றனா். இவா்களுக்கு 2 ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள்.

இதில் 4 வயது சிறுவனான ஸ்ரீதா் திங்கள்கிழமை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது வீட்டில் இருந்த குளிா்சாதனப் பெட்டி (ஃப்ரிஜ்), எதிா்பாராத விதமாக சாய்ந்து ஸ்ரீதா் மீது விழுந்தது. இதில் சிறுவனின் தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்கமடைந்தாா்.

உடனே, குடும்பத்தினா் சிறுவனை மீட்டு காரிமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவா்கள் சிறுவன் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா். அதைத் தொடா்ந்து சிறுவனின் உடல் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இந்த சம்பவம் தொடா்பாக காரிமங்கலம் போலீசாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.