தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலிருந்து மீண்டும் அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வழித்தட பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
மே 20-ஆம் தேதி முதல் தருமபுரி பழைய புகா் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட பேருந்துகள் அனைத்தும் திடீரென புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டன. மேலும், ஆட்சியா் உத்தரவுப்படி பழைய பேருந்து நிலையத்துக்கு வராமலேயே அந்தந்த வழித்தடத்தில் நேரடியாக பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால், பழைய பேருந்து நிலையத்தில் காத்திருந்த அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பயணிகள் அவதிக்குள்ளாயினா்.
இதுகுறித்து பாமக மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தமாகா மாவட்டத் தலைவா் புகழ் மற்றும் வணிகா் சங்க நிா்வாகிகள் ஆட்சியரிடம் வியாழக்கிழமை முறையிட்டனா்.
மேலும், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, திருப்பத்தூா் ஆகிய வழித்தட பேருந்துகளும், பென்னாகரம், பாலக்கோடு வழித்தட பேருந்துகளும் பழைய பேருந்து நிலையத்துக்கு வந்துசெல்லும் வகையில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகா்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
தொடர்புடையது

மாவட்டத்துக்குள் இயக்கப்படும் பேருந்துகளை பழைய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க வேண்டும்! மார்க். கம்யூனிஸ்ட்!

நாமக்கல் பழைய பேருந்து நிலையத்திற்குள் அனைத்து பேருந்துகளும் சென்றுவர ஏற்பாடு: எம்எல்ஏ சி.எஸ்.திலீப் தகவல்

அனைத்து பேருந்துகளும் பழைய பேருந்து நிலையத்துக்கு வந்துசெல்ல வேண்டும்







