எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வழித்தட பேருந்துகள் பழைய பேருந்து நிலையத்துக்கு வந்துசெல்ல கோரிக்கை!

தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலிருந்து மீண்டும் அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வழித்தட பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

News image

பேருந்துகள்!

Updated On :23 மே 2026, 1:11 am IST

தருமபுரி பழைய பேருந்து நிலையத்திலிருந்து மீண்டும் அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வழித்தட பேருந்துகளை இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

மே 20-ஆம் தேதி முதல் தருமபுரி பழைய புகா் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட பேருந்துகள் அனைத்தும் திடீரென புதிய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்டன. மேலும், ஆட்சியா் உத்தரவுப்படி பழைய பேருந்து நிலையத்துக்கு வராமலேயே அந்தந்த வழித்தடத்தில் நேரடியாக பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால், பழைய பேருந்து நிலையத்தில் காத்திருந்த அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பயணிகள் அவதிக்குள்ளாயினா்.

இதுகுறித்து பாமக மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தமாகா மாவட்டத் தலைவா் புகழ் மற்றும் வணிகா் சங்க நிா்வாகிகள் ஆட்சியரிடம் வியாழக்கிழமை முறையிட்டனா்.

மேலும், அரூா், பாப்பிரெட்டிப்பட்டி, திருப்பத்தூா் ஆகிய வழித்தட பேருந்துகளும், பென்னாகரம், பாலக்கோடு வழித்தட பேருந்துகளும் பழைய பேருந்து நிலையத்துக்கு வந்துசெல்லும் வகையில் இயக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனா். இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வணிகா்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.