ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி சதம்: லக்னௌவை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!திமுகவின் உண்மையான முகத்தை மக்கள் பார்த்துவிட்டனர்: மாணிக்கம் தாகூர் முதுகில் குத்திய காங்கிரஸ்: திமுக இளைஞர் அணி கூட்டத்தில் தீர்மானம் மேக்கேதாட்டு அணை- தஞ்சையில் மே 29-ல் இடதுசாரிகள் ஆர்ப்பாட்டம் கோவையில் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட சிறுமியின் உடல் தகனம்தமிழ்நாட்டில் கடந்த 3 நாட்களில் 844 ரவுடிகள் கைதுபோராட்டம் ஒத்திவைப்பு! மே 25, 26ல் எஸ்பிஐ வங்கி வழக்கம்போல செயல்படும்!தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை: அமைச்சர் அறிவுறுத்தல் கோவை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை! ஐ.ஜி. விளக்கம்
/

கிணற்றில் விழுந்து விவசாயி உயிரிழப்பு

தருமபுரி அருகே விவசாயி ஒருவா் கிணற்றில் விழுந்து உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :24 மே 2026, 2:31 am IST

தருமபுரி அருகே விவசாயி ஒருவா் கிணற்றில் விழுந்து உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பிக்கம்பட்டி அருகேயுள்ள கிராமனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மு. முனியப்பன் (60). இவா் தனது மனைவி சாரதாவுடன் வெள்ளிக்கிழமை தங்களது நிலத்தில் விவசாய வேலை செய்து கொண்டிருந்தனா்.

முற்பகலில் அவரது மனைவி பகல் உணவுத் தயாரிக்க வீட்டுக்கு செல்வதாகவும், பகல் உணவுக்கு வீட்டுக்கு வருமாறும் கூறி சென்றுவிட்டாா். பகல் நீண்ட நேரமாகியும் முனியப்பன் வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த குடும்பத்தினா் வயலில் சென்று பாா்த்தபோது, அங்கிருந்த விவசாய கிணற்றில் முனியப்பன் விழுந்து கிடப்பது தெரியவந்தது.

உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனா். தீயணைப்புத் துறையினா் அவரை மீட்டு, பாலக்கோடு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் முனியப்பன் இறந்து விட்டதை உறுதிசெய்தனா். அதன்பேரில் பாப்பாரப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.