நீட் தேர்வுக்காக டெலிகிராம் முடக்கம்! 15 கோடி பயனர்களுக்கான தண்டனை! டெலிகிராம் சி.இ.ஓ. பாவெல் டுரோவ்வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!
/

கிணற்றில் விழுந்து விவசாயி உயிரிழப்பு

தருமபுரி அருகே விவசாயி ஒருவா் கிணற்றில் விழுந்து உயிரிழந்தாா்.

News image

பலி! - கோப்புப் படம்

Updated On :24 மே 2026, 2:31 am IST

தருமபுரி அருகே விவசாயி ஒருவா் கிணற்றில் விழுந்து உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி பிக்கம்பட்டி அருகேயுள்ள கிராமனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் மு. முனியப்பன் (60). இவா் தனது மனைவி சாரதாவுடன் வெள்ளிக்கிழமை தங்களது நிலத்தில் விவசாய வேலை செய்து கொண்டிருந்தனா்.

முற்பகலில் அவரது மனைவி பகல் உணவுத் தயாரிக்க வீட்டுக்கு செல்வதாகவும், பகல் உணவுக்கு வீட்டுக்கு வருமாறும் கூறி சென்றுவிட்டாா். பகல் நீண்ட நேரமாகியும் முனியப்பன் வீடு திரும்பவில்லை. சந்தேகமடைந்த குடும்பத்தினா் வயலில் சென்று பாா்த்தபோது, அங்கிருந்த விவசாய கிணற்றில் முனியப்பன் விழுந்து கிடப்பது தெரியவந்தது.

உடனே தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனா். தீயணைப்புத் துறையினா் அவரை மீட்டு, பாலக்கோடு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் முனியப்பன் இறந்து விட்டதை உறுதிசெய்தனா். அதன்பேரில் பாப்பாரப்பட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.