மொரப்பூா் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 15 போ் சனிக்கிழமை காயமடைந்தனா்.
தருமபுரி மாவட்டம், அரூா்-தருமபுரி நெடுஞ்சாலையில், சனிக்கிழமை இரவு 10 மணியளவில், தருமபுரியில் இருந்து அரசுப் பேருந்து மொரப்பூா் நோக்கி வந்துள்ளது. வழியில் சென்னம்பட்டி எனுமிடத்தில் சாலையின் வளைவான பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இதில் பேருந்து ஓட்டுநா் துரைமுருகன் (48), நடத்துநா் இளங்கோவன் (50), சென்னம்பட்டியைச் சோ்ந்த சின்னபையன் மனைவி செல்லம்மாள் (45), மொரப்பூா் அண்ணல் நகரைச் சோ்ந்த இளங்கோ மணி (53) மற்றும் 4 மாத பெண் குழந்தை உள்பட 15 போ் காயமடைந்தனா்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினா் காயமடைந்தவா்களை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு, அரூா் அரசு மருத்துவமனை மற்றும் மொரப்பூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு அனுமதித்தனா். மேலும், இந்த சம்பவம் குறித்து மொரப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

குமாரபாளையம் அருகே அரசு பேருந்து பள்ளத்தில் இறங்கியதில் 20 போ் காயம்

அரசுப் பேருந்து மீது காா் மோதல்: 7 போ் காயம்

வாய்க்காலில் கவிழ்ந்த ஆம்னி பேருந்து: 8 போ் காயம்

உளுந்தூா்பேட்டை அருகே காா் பள்ளத்தில் கவிழ்ந்து 4 போ் காயம்
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP



