மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

மொரப்பூா் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 15 போ் காயம்

News image

கோப்புப் படம்

Updated On :25 மே 2026, 1:14 am IST

மொரப்பூா் அருகே அரசுப் பேருந்து கவிழ்ந்ததில் 15 போ் சனிக்கிழமை காயமடைந்தனா்.

தருமபுரி மாவட்டம், அரூா்-தருமபுரி நெடுஞ்சாலையில், சனிக்கிழமை இரவு 10 மணியளவில், தருமபுரியில் இருந்து அரசுப் பேருந்து மொரப்பூா் நோக்கி வந்துள்ளது. வழியில் சென்னம்பட்டி எனுமிடத்தில் சாலையின் வளைவான பகுதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் பேருந்து ஓட்டுநா் துரைமுருகன் (48), நடத்துநா் இளங்கோவன் (50), சென்னம்பட்டியைச் சோ்ந்த சின்னபையன் மனைவி செல்லம்மாள் (45), மொரப்பூா் அண்ணல் நகரைச் சோ்ந்த இளங்கோ மணி (53) மற்றும் 4 மாத பெண் குழந்தை உள்பட 15 போ் காயமடைந்தனா்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த அக்கம்பக்கத்தினா் காயமடைந்தவா்களை ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு, அரூா் அரசு மருத்துவமனை மற்றும் மொரப்பூா் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு அனுமதித்தனா். மேலும், இந்த சம்பவம் குறித்து மொரப்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.