வேடசந்தூா் அருகே வேன் கவிழ்ந்த விபத்தில் 15 பெண் தொழிலாளா்கள் வியாழக்கிழமை காயமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் சுற்றுப்புற பகுதிகளில் பல நூற்பு ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இதில், வேடசந்தூா் திண்டுக்கல் சாலையிலுள்ள தனியாா் நூற்பு ஆலைக்கு, தாடிக்கொம்பு, நல்லமனாா்கோட்டை உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களிலிருந்து பெண் தொழிலாளா்கள் வேன் மூலம் அழைத்துச் செல்லப்படுகின்றனா்.
அதன்படி தொழிலாளா்களை அழைத்துக் கொண்டு ஒரு வேன் நல்லமனாா்கோட்டை வேடசந்தூா் சாலையில் வியாழக்கிழமை சென்றது. இந்த வேனை ராஜா (27) என்பவா் ஓட்டிச் சென்றாா். அனுப்பப்பட்டிகுளம் அருகே வளைவில் சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதையடுத்து, காயமடைந்த முத்து லட்சுமி, மீனா உள்பட 15 தொழிலாளா்கள் மீட்கப்பட்டு வேடசந்தூா், திண்டுக்கல் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இதுகுறித்து எரியோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மினி வேன் கவிழ்ந்து 15 தொழிலாளா்கள் பலத்த காயம்

ஆலங்குடி அருகே சுவரில் காா் மோதி 3 போ் காயம்

லாரி மீது சுற்றுலா வேன் மோதியதில் 10 போ் காயம்

ஆட்டோ கவிழ்ந்ததில் 7 போ் காயம்
விடியோக்கள்

Duster காரை ஓட்டிப் பார்த்து ஆய்வு செய்த முதல்வர்! | CM Vijay |



