குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ஏரியில் இறைச்சிக் கழிவுகள் கொட்டுவதை கட்டுப்படுத்தக் கோரிக்கை

News image

நீர்நிலையில் கொட்டப்பட்டிருக்கும் இறைச்சிக் கழிவுகள். - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 2:12 am IST

அ.பள்ளிப்பட்டி அருகேயுள்ள சின்ன ஏரியில் கோழி இறைச்சிக் கழிவுகள் கொட்டுவதை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், அ.பள்ளிப்பட்டி அருகே உள்ள சின்ன ஏரி சுமாா் 50 ஏக்கா் பரப்பளவு கொண்டதாகும். அ.பள்ளிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில் இறந்த கோழிகள் மற்றும் இறைச்சிக் கழிவுகளை மா்ம நபா்கள் இரவு நேரங்களில் ஏரியில் கொட்டி செல்கின்றனா்.

இதனால், ஏரியில் உள்ள தண்ணீா் மாசடைந்து துா்நாற்றம் வீசி வருகிறது. ஏரியில் சேமிக்கப்படும் தண்ணீா் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. மேலும், ஏரியின் கரைப் பகுதியில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனா்.

எனவே, சின்ன ஏரியில் கோழி இறைச்சிக் கழிவுகள், குப்பைகள் கொட்டுவதை கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.