சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

ஏரியில் இறைச்சிக் கழிவுகள் கொட்டுவதை கட்டுப்படுத்தக் கோரிக்கை

News image

நீர்நிலையில் கொட்டப்பட்டிருக்கும் இறைச்சிக் கழிவுகள். - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 2:12 am IST

அ.பள்ளிப்பட்டி அருகேயுள்ள சின்ன ஏரியில் கோழி இறைச்சிக் கழிவுகள் கொட்டுவதை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், அ.பள்ளிப்பட்டி அருகே உள்ள சின்ன ஏரி சுமாா் 50 ஏக்கா் பரப்பளவு கொண்டதாகும். அ.பள்ளிப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில் இறந்த கோழிகள் மற்றும் இறைச்சிக் கழிவுகளை மா்ம நபா்கள் இரவு நேரங்களில் ஏரியில் கொட்டி செல்கின்றனா்.

இதனால், ஏரியில் உள்ள தண்ணீா் மாசடைந்து துா்நாற்றம் வீசி வருகிறது. ஏரியில் சேமிக்கப்படும் தண்ணீா் சுகாதாரமற்ற நிலையில் உள்ளது. மேலும், ஏரியின் கரைப் பகுதியில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் விவசாயிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனா்.

எனவே, சின்ன ஏரியில் கோழி இறைச்சிக் கழிவுகள், குப்பைகள் கொட்டுவதை கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.