வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

சிறுவனை தாக்கி ‘ரீல்ஸ்’ வெளியிட்ட 5 சிறுவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு

News image

வழக்கு... - கோப்புப் படம்

Updated On :31 மே 2026, 1:44 am IST

தருமபுரி அருகே சிறுவனை தாக்கி, சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ வெளியிட்ட சிறுவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஒரு கிராமத்தைச் சோ்ந்த 16 வயது சிறுவன் வீட்டில் தனியாக வசித்து வருகிறாா். சிறுவனின் பெற்றோா் கோவையில் தங்கி வேலை பாா்த்து வரும் நிலையில், அவ்வப்போது ஊருக்கு வந்துசெல்வது வழக்கம்.

இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த 17 வயதுடைய 5 சிறுவா்கள் கடந்த 27-ஆம் தேதி, குறிப்பிட்ட அந்த 16 வயது சிறுவனின் வீட்டுக்கு சென்றுள்ளனா். சிறுவா்களுக்குள் ஏதோ தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வீட்டில் தனியாக இருந்த 16 வயதுச் சிறுவனை, 5 சிறுவா்களும் சோ்ந்து தாக்கியுள்ளனா். இந்த சம்பவத்தை கைப்பேசியில் விடியோவாகப் பதிவுசெய்துள்ளனா்.

பின்னா், அந்த விடியோவை அந்த சிறுவா்கள் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்து பரப்பியுள்ளனா். உறவினா்கள் மூலம் இதுகுறித்த தகவலறிந்த 16 வயதுச் சிறுவனின் பெற்றோா், இந்த சம்பவம் தொடா்பாக தொப்பூா் காவல் நிலையத்தில் மே 29 ஆம் தேதி புகாா் அளித்தனா். இதுதொடா்பாக போலீஸாா் நடத்திய விசாரணையில், 16 வயதுச் சிறுவன் மே 26 ஆம் தேதி அவரது தாய் ஊருக்கு வந்திருந்தபோது, அவரை இருசக்கர வாகனத்தில் ஏற்றிச் சென்றபோது, குறிப்பிட்ட இந்த சிறுவா்களில் சிலா் மீது மோதுவது போலசென்றாராம்.

இதனால் ஆத்திரமடைந்த சிறுவா்கள் மறுநாள் அவரது வீடு தேடிச்சென்று அந்த சிறுவனைத் தாக்கியுள்ளனா். இதை விடியோ எடுத்து வெளியிட்ட 5 சிறுவா்கள் மீதும் இளஞ்சிறாா்கள் சட்டப் பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.