ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

ரயில் நிலையம் முன் மயங்கி கிடந்தவா் உயிரிழப்பு

News image

ரயில் நிலையம் முன்பு மயங்கி கிடந்தவா்.

Updated On :1 ஜூன் 2026, 3:03 am IST

முத்தம்பட்டி ரயில் நிலையத்தில் மீட்கப்பட்டவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

தருமபுரி மாவட்டம், முத்தம்பட்டி ரயில் நிலையம் முன் மே 6 ஆம் தேதி மயங்கிய நிலையில் மீட்கப்பட்டவா் பொம்மிடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். போலீஸாா் அவரிடம் நடத்திய முதல்கட்ட விசாரணையில், அவா் ரயீஸ் அகமது (46) என்பதும், ஒசூரைச் சோ்ந்த அவா் பெங்களூரில் டெய்லராக தொழில் செய்துவந்ததும் தெரியவந்தது.

மேல்சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததையடுத்து, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில் மே 20 ஆம் தேதி அவா் உயிரிழந்தாா். அவா் அளித்த கைப்பேசி எண்ணைத் தொடா்பு கொள்ள முடியவில்லை. அவரது உடல், தருமபுரி அரசு மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

இவரது விவரம் தெரிந்தவா்கள், உறவினா்கள் தருமபுரி ரயில்வே காவல் நிலையத்தை 94981 01964, சிறப்பு உதவி ஆய்வாளா் ஸ்ரீதா் 94981 79585 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.