விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

பெரியாரின் அறவழியே சமூக மாற்றத்தை உருவாக்கும்: கனிமொழி

திருச்சி, ஜன. 8: பெரியாரின் அன்பு வழி, அறவழியே சமூக மாற்றத்தை உருவாக்கும் என்றார் மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி.   திருச்சியில் நடந்துவரும் உலக நாத்திகர் மாநாட்டின் 2 ஆம் நாளான சனிக்கிழமை இரவு

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

திருச்சி, ஜன. 8: பெரியாரின் அன்பு வழி, அறவழியே சமூக மாற்றத்தை உருவாக்கும் என்றார் மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி.

  திருச்சியில் நடந்துவரும் உலக நாத்திகர் மாநாட்டின் 2 ஆம் நாளான சனிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

   அறிவுத் தேடல் இருக்க வேண்டும் என்பதுதான் நாத்திகம். ஆனால், மாற்றுக் கருத்தை கண்மூடித்தனமாக நிராகரிப்பதுதான் மதம். என்ன செய்ய வேண்டும்? என்ன படைக்க வேண்டும்? என்ன சிந்திக்க வேண்டும்? என்ன படிக்க வேண்டும்? என மக்களுக்குச் சொல்லும் சர்வாதிகாரிகளாக மதத் தலைவர்கள் மாறிவிட்டிருக்கின்றனர்.

  மாற்றுக் கருத்துக்கு இப்போது கடுமையான எதிர்ப்புகள் உருவாகியிருக்கின்றன. பெரியார் காலத்தில்கூட இந்தளவுக்கு அச்சுறுத்தல்கள் இல்லை. படைப்புத் தளங்கள் சுருங்கி வருகின்றன. "தலிபானைஷேசன்' நடைபெற்று வருகிறது.

  ஒவ்வொரு நாளும் நம்மை நாம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்காகச் சிந்திக்க வேண்டும். ஜாதி, மதத்தை விட்டு திருமணம் செய்து கொள்வது பெரிய துரோகம் என்று கருதப்படுகிறது. அதையொட்டி கெüரவக் கொலைகளும் நடைபெறுகின்றன.

  அன்பு, சுயமரியாதை இவற்றைப் படிப்பிக்கும் பெரியார் வழிதான் மாற்றத்துக்கு வழிவகுக்கும். அதுதான் அன்பு வழி, அறவழி' என்றார் கனிமொழி.  

  பொதுக் கூட்டத்துக்கு, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமை வகித்தார். திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலர் சுப. வீரபாண்டியன், திராவிடர் கழகப் பிரசாரச் செயலர் வழக்குரைஞர் அருள்மொழி உள்ளிட்டோர் பேசினர். திராவிடர் கழகப் பொருளாளர் கோ. சாமிதுரை வரவேற்றார். மாவட்டத் தலைவர் மு. சேகர் நன்றி கூறினார்.

 முன்னதாக, மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி சிந்தாமணி அண்ணா சிலை அருகேயிருந்து தொடங்கியது. திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலர் இரா. குணசேகரன் பேரணியைத் தொடங்கி வைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.