பள்ளி மாணவர்களுக்கு சீருடை அளிப்பு

தருமபுரி மாவட்டம், வி.பள்ளிப்பட்டி ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சீருடைகள் உள்ளிட்டப் பொருள்கள் வழங்கப்பட்டன.
Updated on
1 min read

தருமபுரி மாவட்டம், வி.பள்ளிப்பட்டி ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளி மாணவர்களுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சீருடைகள் உள்ளிட்டப் பொருள்கள் வழங்கப்பட்டன.

மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வி.பள்ளிப்பட்டி ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளியில் பயிலும் 50 மாணவர்களுக்கு விலையில்லா புத்தகங்கள், சீருடைகள், நோட்டுப் புத்தகங்கள், வண்ணப் பென்சீல்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் கோ.குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் பானு பிரியா, உதவி ஆசிரியர் நத்தகோபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com