சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் ஆய்வு

தருமபுரியில் சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் எம்.பிராகாஷ் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
Updated on
1 min read

தருமபுரியில் சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் எம்.பிராகாஷ் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் நடைபெற்ற இக் கூட்டத்தில், தருமபுரி மாவட்ட கிறிஸ்தவர்களுக்கான கல்லறைத் தோட்டம் மற்றும் இஸ்லாமியர்களுக்கான அடக்க ஸ்தலங்கள் அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட அவர், விரைவாக கல்லறைத் தோட்டம் மற்றும் இஸ்லாமியர்களுக்கான அடக்க ஸ்தலங்கள் தேவையான பகுதிகளில் அமைத்துக் கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தினர்.
மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் எம்.காளிதாசன், கோட்டாட்சியர்கள் ராமமூர்த்தி, கவிதா, சிறுபான்மையினர் நல அலுவலர் அமீர்பாஷா, அனைத்து அலுவலர்கள் மற்றும் சிறுபான்மையினர் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com