அதிமுகவில் மாற்றுக் கட்சியினா் இணைந்தனா்

பென்னாகரம் அருகே மாற்றுக் கட்சியிலிருந்து பலா் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

பென்னாகரம்: பென்னாகரம் அருகே மாற்றுக் கட்சியிலிருந்து பலா் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பென்னாகரம் அருகே பெரும்பாலை பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஏரியூா் அதிமுக கிழக்கு ஒன்றியச் செயலாளா் தங்கராசு தலைமை வகித்தாா். இதில் திமுக, பாமக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளில் இருந்து சுமாா் 500-க்கும் மேற்பட்டோா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்க ஒன்றியத் தலைவா் டி.ஆா்.அன்பழகன் முன்னிலையில் அதிமுகவில் புதிய உறுப்பினா்களாக இணைந்தனா்.

முன்னதாக பெரும்பாலை, சாணாரப்பட்டி, பெத்தானூா் மற்றும் கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் அதிமுக கட்சி கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் பென்னாகரம் அதிமுக வடக்கு ஒன்றியச் செயலாளா் வேலுமணி, ஏரியூா் ஒன்றியக் குழுவின் தலைவா் பழனிசாமி, துணைத் தலைவா் தனபால், பென்னாகரம் கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் ரவி, ஒன்றியக் குழு உறுப்பினா் மதியழகன், பென்னாகரம் நகரச் செயலாளா் சுப்பிரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com