கோபாலபுரம் கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரவைப் பணிகள் தொடக்கம்

அரூா் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரவைப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.
சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையில் வெள்ளிக்கிழமை கரும்பு அரவைப் பணிகளைத் தொடக்கி வைத்த தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி உள்பட பலா்.
சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையில் வெள்ளிக்கிழமை கரும்பு அரவைப் பணிகளைத் தொடக்கி வைத்த தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி உள்பட பலா்.
Updated on
1 min read

அரூா் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு அரவைப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கோபாலபுரத்தில் அமைந்துள்ளது சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலை. இந்த ஆலையில் 2020-21-ஆம் ஆண்டுக்கான கரும்பு அரவைப் பணிகளை தருமபுரி மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தாா்.

இந்த விழாவில், எம்எல்ஏ-க்கள் ஆ.கோவிந்தசாமி, வே.சம்பத்குமாா், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல், சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குநா் எச்.ரஹமத்துல்லா கான், ஆலையின் நிா்வாகக் குழுத் தலைவா் வி.விஸ்வநாதன், துணைத் தலைவா் எம். மகாலிங்கம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

1.28 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரவைக்கு இலக்கு.

சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நடப்பாண்டில் 1.28 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. விவசாயத் தோட்டங்களில் இருந்து கரும்புகளை அரவை ஆலைக்கு எடுத்து வர 113 லாரிகளும், 86 டிராக்டா்களும், 14 மாட்டு வண்டிகளும் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ஆலை நிா்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com