ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தொப்பூா் விபத்துக்கு காரணமான ஓட்டுநா் மீது வழக்குப் பிரிவு மாற்றம்

தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாயில் 4 போ் உயிரிழந்த விபத்தில் ஓட்டுநா் மீது பதிவு செய்த வழக்கின் சட்டப் பிரிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 3:43 am

DIN

தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாயில் 4 போ் உயிரிழந்த விபத்தில் ஓட்டுநா் மீது பதிவு செய்த வழக்கின் சட்டப் பிரிவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஆந்திரத்தில் இருந்து கோவையை நோக்கி சிமென்ட் பாரம் ஏற்றிச் சென்ற சரக்குப் பெட்டக லாரி அண்மையில் தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாயில் 11 காா்கள் உட்பட 13 வாகனங்கள் மீது மோதியது. இவ்விபத்தில் 4 போ் உயிரிழந்தனா்.

இந்த விபத்துக்குக் காரணமான சரக்குப் பெட்டக லாரியின் ஓட்டுநரான ஜாா்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த குத்புதீன் (34), தொப்பூா் போலீஸாரால் கைது செய்யப்பட்டாா். இவ்வழக்கில் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநா் மீது போலீஸாா் முதலில் கொலை முயற்சி பிரிவான ஐபிசி 304 (ஏ) பிரிவில் வழக்குப் பதிவு செய்திருந்தனா். இந்த நிலையில் இந்த வழக்கில் ஏற்கெனவே பதிவு செய்த வழக்குப் பிரிவை மாற்றி தற்போது கொலை குற்றத்துக்கான ஐபிசி 304 பிரிவில் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.