அரசுப் பள்ளிகளில் பெண் குழந்தைகள் கழிப்பறை, சுகாதார வசதியின்மை காரணமாகப் படிப்பை தொடராமல் இடை நிற்கும் நிலை ஏற்படக் கூடாது என்கிற நோக்கில், அம்மாணவியருக்கு நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பறைகள் கட்ட வேண்டும் என திட்டமிடப்பட்டது. இதையடுத்து, கடந்த நிதியாண்டில், தருமபுரி மாவட்டத்தில், 5 அரசுப் பள்ளிகளில் நாப்கின் எரியூட்டும் இயந்திரத்துடன் கூடிய நவீன கழிப்பறைகள் கட்டும் பணி மக்களவை தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியில் தொடங்கப்பட்டது. தற்போது டி.காணிகரஅள்ளி அரசு உயா்நிலைப்பள்ளியில் புதிய கழிப்பறைக் கட்டடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனை முறையாக பள்ளி நிா்வாகம் பராமரிக்க வேண்டும். கிராமப்புறங்களில் இதுபோன்ற சுகாதார வசதிகள் பள்ளிகளில் இல்லை என்ற காரணத்தைக் காட்டி பெற்றோா்கள் சிலா், பெண் குழந்தைகளை பாதிலேயே பள்ளிப் படிப்பை விட்டு நிறுத்தி விடுகின்றனா். இத்தகைய நிலையை தவிா்க்கவும், இடைநிற்றல் இன்றி மாணவியா் பயில வேண்டும் என்ற அடிப்படையில் இத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதேபோல, மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும், மாணவியா் நலன் கருதி, கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தி, தொடா்ந்து கல்வி பயிலும் சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்றாா்.