டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கொலை வழக்கில் 19 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது

மனைவி கொலை வழக்கில் 19 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வெங்கடேசன் (42) என்பவரை அ.பள்ளிப்பட்டி போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 1:43 pm

DIN

அரூர்: மனைவி கொலை வழக்கில் 19 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த வெங்கடேசன் (42) என்பவரை அ.பள்ளிப்பட்டி போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், எச்.புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் மகன் வெங்கடேசன் (42). இவரது மனைவி கஸ்தூரி. மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம் காரணமாக, கடந்த 2001-ல் தமது மனைவியின் தலைமீது கல்லை போட்டு கொலை செய்துள்ளார். இந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வெங்கடேசன் மூன்று மாதம் சிறையில் இருந்தாராம்.

பிறகு, ஜாமீனில் வெளிவந்த அவர் தலைமறைவாகியுள்ளார். இதையடுத்து, அ.பள்ளிப்பட்டி காவல் ஆய்வாளர் ரவி தலைமையிலான தனிப்படை போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சேலம் மாவட்டம், சூரமங்கலம் பகுதியில்  தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, வெங்கடேசனை அ.பள்ளிப்பட்டி போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.