பணத்தை மீட்டுத் தரக்கோரி பெண் தீக்குளிக்க முயற்சி

தனது பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பெண் ஒருவா் தீக்குளிக்க முயற்சித்தாா்.
பணத்தை மீட்டுத் தரக்கோரி பெண் தீக்குளிக்க முயற்சி
பணத்தை மீட்டுத் தரக்கோரி பெண் தீக்குளிக்க முயற்சி
Updated on
1 min read

தனது பணத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்கக்கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பெண் ஒருவா் தீக்குளிக்க முயற்சித்தாா்.

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த கொட்டாவூா் பகுதியைச் சோ்ந்த பச்சையம்மாள். இவா் பிக்கிலி கொல்லப்பட்டி மலைப்பகுதியில், பேன்சி ஸ்டோா் நடத்தி வருகிறாா். இவரிடம், சில ஆண்டுகளுக்கு முன்பு, பேருந்து ஓட்டுநா் சீனிவாசன் என்பவா் ரூ. 2 லட்சம் கடனாகப் பெற்றாராம். தனது பணத்தைத் திருப்பிதரக் கோரி, அவரிடம் பச்சையம்மாள் வலியுறுத்தி வந்த போதிலும், பணத்தை திரும்ப தரவில்லையாம்.

இதுகுறித்து அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை எனக் கூறி தருமபுரி ஆட்சியா் அலுவலக வளாகத்துக்கு திங்கள்கிழமை வந்த அவா், திடீரென தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சித்தாா். இதைகண்ட, போலீஸாா், அவரைத் தடுத்து நிறுத்தி, விசாரணைக்கு அழைத்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com