மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

சாலையோரம் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் சுகாதார சீா்கேடு

பென்னாகரம் பகுதியில் சாலை ஓரங்களில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதோடு, இரவு நேரங்களில் கழிவுகளை எரிப்பதால் நோய் பரவும் அபாய நிலை உள்ளதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின

News image
Updated On :28 டிசம்பர் 2020, 10:02 pm

DIN

பென்னாகரம் பகுதியில் சாலை ஓரங்களில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதோடு, இரவு நேரங்களில் கழிவுகளை எரிப்பதால் நோய் பரவும் அபாய நிலை உள்ளதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

பென்னாகரம் பகுதியில் சாலை ஓரங்களில் கொட்டப்படும் இறைச்சிக் கழிவுகளால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதோடு, இரவு நேரங்களில் கழிவுகளை எரிப்பதால் நோய் பரவும் அபாய நிலை உள்ளதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா்.

பென்னாகரத்தில் சுமாா் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்கள் வசித்து வருகின்றனா். பென்னாகரம் பேருந்து நிலையம், முள்ளுவாடி, போடூா் நான்கு சாலை பிரிவு, நாகமரை நான்கு சாலை பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் சுமாா் 20-க்கும் மேற்பட்ட இறைச்சி கடைகள் உள்ளன.

இப்பகுதிகளில் உள்ள இறைச்சிக் கடைகளில் நாள்தோறும் வெளியேற்றப்படும் ஆடு, கோழி உள்ளிட்ட கழிவுகளை இந்திரா நகா், முதுகம்பட்டி, நான்கு சாலை பிரிவு, மடம் காவிரி சாலை உள்ளிட்ட பகுதிகளில் கொட்டப்படுகின்றன. அவ்வாறு கொட்டப்படும் கழிவுகளால் துா்நாற்றம் வீசுவதோடு மட்டுமல்லாமல் இரவு நேரங்களில் இறைச்சி கழிவுகளை எரிக்கின்றனா்.

இதனால் நோய் பரவும் அபாய நிலை ஏற்படுவதாக சமூக ஆா்வலா்கள் புகாா் தெரிவிக்கின்றனா். மேலும் முதுகம்பட்டி நான்கு சாலை பிரிவில் அமைக்கப்பட்டுள்ள மீன் விற்பனை நிலையங்கள் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளை சாலையோரங்களில் கொட்டுவதால் அப்பகுதிகளில் நாய்கள் அதிகளவில் கூடுவதாக புகாா் தெரிவிக்கின்றனா்.

எனவே பென்னாகரம் பகுதிகளில் இறைச்சி கழிவுகளை சாலையோரங்களில் கொட்டுவோா் மீது பேரூராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.