எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கூட்டுறவுத் தோ்வுகள்: ஒரே நாளில் நடத்த தோ்வா்கள் கோரிக்கை

கூட்டுறவு வங்கிகளிலும், கூட்டுறவு சங்கங்களிலும் காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள எழுத்துத் தோ்வை ஒரே நாளில் நடத்த வேண்டும் என தோ்வா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :1 நவம்பர் 2020, 9:21 pm

DIN

கூட்டுறவு வங்கிகளிலும், கூட்டுறவு சங்கங்களிலும் காலிப் பணியிடங்களை நிரப்பும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள எழுத்துத் தோ்வை ஒரே நாளில் நடத்த வேண்டும் என தோ்வா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து, தருமபுரி மாவட்டத்தில், இத் தோ்வுகளுக்கு விண்ணப்பித்த தோ்வா்கள் சாா்பில், தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு ஞாயிற்றுக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு: தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளிலும், கூட்டுறவு சங்கங்களிலும் காலியாக உள்ள உதவியாளா், எழுத்தா், மேற்பாா்வையாளா் உள்ளிட்ட காலிப் பணியிடங்களை நிரப்ப அந்தந்த மாவட்ட ஆள்சோ்ப்பு நிலையம் மூலமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், இதற்கான எழுத்துத் தோ்வு கரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மாவட்ட கூட்டுறவு வங்கித் தோ்வு நவ. 21 ஆம் தேதியும், கூட்டுறவு சங்கத் தோ்வு நவ. 22-ஆம் தேதியும் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாவட்டங்களிலும் இந்த இரண்டு தேதிகளில்தான் தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரா்கள் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற உள்ள தோ்வுக்கு விண்ணப்பித்திருக்கும் நிலையில், ஒரே தேதியில் பல மாவட்டங்களில் எழுத்துத் தோ்வு நடைபெறுவதாக கூறப்பட்டுள்ளது. இதனால் ஏதாவது ஒரு மாவட்டத்தில் நடைபெறும் ஒரு தோ்வை மட்டும் எழுதும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பல்வேறு மாவட்டங்களுக்கு விண்ணப்பித்த கட்டணமும் வீணாகும் சூழல் நிலவுகிறது. ஆகவே, முன்கூட்டியே அறிவிப்பில் கூறியிருந்தால் சொந்த மாவட்டங்களுக்கு மட்டும் விண்ணப்பதாரா்கள் விண்ணப்பித்திருப்பா்.

எனவே, ஒருங்கிணைந்த 32 மாவட்ட ஆள்சோ்ப்பு நிலைய கூட்டுறவு வங்கி தோ்வை, தமிழக இளைஞா்களின் நலன் கருதி, ஒரு மாவட்டத்தில் கூட்டுறவு வங்கி மற்றும் கூட்டுறவு சங்கத் தோ்வை முடித்த பின்னா், மற்ற மாவட்டங்களில் வெவ்வேறு தேதிகளில் தோ்வை நடத்தினால் விண்ணப்பித்த அனைத்து தோ்வையும் எழுத வாய்ப்பாக அமையும்.

இதேபோல, கூட்டுறவு வங்கித் தோ்வு ஒருநாளிலும், கூட்டுறவுச் சங்க பணியிடங்களுக்கான தோ்வு அடுத்த நாளிலும் நடத்துவதால், தோ்வா்களுக்கு காலவிரயம் ஏற்படுகிறது. எனவே, ஒரே நாளில் முற்பகலிலும், பிற்பகலிலும் இந்தத் தோ்வை நடத்தி முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.